4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

தனிமைவாசம் - முனைவர் பீ. பெரியசாமி

 

தனிமைவாசம்

நீந்த தெரியாமலே நீந்துகின்றன

உன்தன் நேரிழை பார்வைகள்

சிக்கிக் கொண்டு சாகின்றது

என் துடிக்க மறந்த இதயம்

எப்போதும் ஈவு இரக்கமே இருப்பதில்லை

உன் இதழ்களுக்கு மட்டும்

என்னை ஈர்ப்பதையே வேலையாக்கி வைத்திருக்கிறது

நான் என்ன உயிரையா கேட்டேன்

அன்பை யாசித்தது அவ்வளவு பெரிய குற்றமா?

அடங்காமல் அலைகிறது கூந்தலின் வாசம்

எத்தனை நாட்கள்தான் எனக்கு தனிமை வாசம்.

-          முனைவர் பீ. பெரியசாமி