உணர மறுக்கும் ஊமத்தனம்
மனசுவர்
கறி கோடுகளின்
வரைகோலம் ஆயிரமாயிரம்.
கலைகாணும் மகிழ்விலது கலங்கரைதான்.
கவலை சூழ்ந்த கணங்களில்
கன்னிபோகும்தன் இரண நலனை யாரறிவார்?
நினைக்க மறந்த நினைவுகளை
தேக்கி வைத்திருக்கும் கிடங்கென..
மன சுழற்சிக்குள்
கணம் காணமுடியாத இரகசியங்கள் கட்டியிட்டுள்ளன.
அதனாழத்தில்
புள்லென இணைந்திருக்கும் காரிருளை
பகல் கனவு வெளிச்சங்கள் வந்தடைதலாகாது.
துடிக்கத் துணைபோன இதயங்களுக்கு
விம்மலின் இசையுறுக்களை
விமர்சிக்க ஏதுகுறை..?
அழவைக்கும் அம்பலங்களால்
அமைதியின் ஊமத்தங்களை
உணர முடியாது
ஈர ஒட்டதம் கொடுத்துக்கொடுத்து
இருகிய இதய நாளங்களை
இளைப்பாற்றல் வீண்!
காண்பவர் கண்களுக்குத் தென்படாத தாபத்தோடு
கரைந்துபோன துயரங்களை
தொட்டெழுதும் கவிமொழிகள்
தொடர இங்கே..
இனி வழியேது..?
- மைத்திரிஅன்பு, காஞ்சிபுரம்