6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 6 அக்டோபர், 2024

வாழ்க்கை - தேவாரம்

 

வாழ்க்கை

யாருக்கெல்லாம் பிடித்திருக்கிறது

வாழ்க்கை எனும் வேடம்

நடிப்பவனுக்கே தெரிவதில்லை

நாடகத்தின் அடுத்த நகர்வு

 

பிடித்திருக்கிறது என்றதுமே

பின்னிக்கொள்கின்றன துயரத்தின் தோரனைகள்

 

கடவுளைக் கைத்தொழுபவன்

வறுமையின் கைப்பிடியில்

கடவுள் இல்லையென்றவன்

லட்சுமியின் மடியில்

 

என்னத்தான் சொல்ல வருகிறது

வசனமில்லா வாழ்க்கை

சிந்தித்துக் கொண்டே நகர்ந்துவிடுகிறது

பலரின் ஆயுட்காலம்

 

மகிழ்வு மனதில் எழ

உன்னை நீ மற

 

வண்டுகளோடு சேர்ந்துக்கொள்

இசைக் கச்சேரிக்கு போக வேண்டாம்

 

பூக்களோடு புதைந்துக்கொள்

வாசனை திரவியங்கள் வாங்க வேண்டாம்

 

பறவைகளோடு பழகிக்கொள்

வானூர்திகள் ஏற வேண்டாம்

 

உன்னோடு நட்பாகிக்கொள்

நண்பர்களைத் தேட வேண்டாம்

- தேவாரம்

கருத்துகள் இல்லை: