சமத்துவம்
என்னமோ தெரியவில்லை
யாருக்கும் புரியவில்லை
புதுமையின் புதிர்கள்
கணவனை இழந்தவன்
கைம்பெண்…
மனைவியை இழந்தவன்
மாற்றமில்லை….
ஆண் ஆணாகிறான்
பெண் அபசகுணத்தின்
குறியீடாகிறாள்….
மானங்கெட்ட சமூகம்
சற்றும் சளைக்காமல்
சொல்கிறது சமத்துவமென…
யாருக்கும் யாரும்
என்றும் சமமல்ல
ஏழை பொதுவழி
பணக்காரன் சிறப்புவழி
கோயில் தரிசனம்
கடவுளிடமே இல்லாததை
மனிதனிடம் எதிர்ப்பார்க்கலாமா…
சமத்துவம் சவக்குழியில்
வாழிய வாழியவே
எங்கள் சமத்துவ
சமுதாயம் வாழியவே…
- தேவாரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக