6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 6 அக்டோபர், 2024

அகநானூறு அறிவோம் - முனைவர் பீ. பெரியசாமி

 

அகநானூறு

பாடல்-1 –தலைவி கூற்று (பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குக் கூறியது.

ஒரு ஊரில் ஒரு தலைவன் தலைவியைப் பிரிந்துச் சென்றுவிடுகிறான். அவன் நினைவாகவே இருக்கும் தலைவி, அந்த தலைவனின் இயல்புகளைச் சொல்ல ஆரம்பிக்கிறாள். எப்பவுமே தன்னுடைய கூந்தலில் பூக்களால் ஆன மாலையை அணிந்திருக்கக் கூடியவன். அவன் அந்த மாலையில் எப்போதும் வண்டுகள் மொய்த்தவாறு இருக்கம். அதுமட்டுமல்லாமல்  வீரத்தில் சிறந்தவன் அவன். அவன் தன் காலில் வீரக்கழலை அணிந்திருப்பான். மிகவும் பலம் பொருந்தவன். அவனுடைய பலத்தை விளக்க நான் ஒரு உதாரணம் சொல்கிறேன் கேள். மறவன் குடியினர் ஒரு சமயம் குதிரைகளைப் பூட்டிக் கொண்டு வந்தார்கள். அப்போது அவர்களைப் பார்ப்பதற்கே பயமாக இருந்தது. அப்பேற்பட்ட மறவர்களையே தோற்கடித்தவன் நம் தலைவன். முருகனைப் போன்ற வெற்றி பெறும் ஆற்றல் உடையவன். தோல்வியே காணாதவன். பழநி மலையில் ஆவினை குடியில் பிறந்தவன். எம் தலைவன் அறுத்துச் செய்யப்பட்ட கொம்புகளைக் கொண்ட யானைகளையும் அழகிய மலையையும் கொண்ட தலைவன் எனக்கு ஒரு சத்தியம் செய்தான். அரக்கோடு கூடிய சாணைக்கல் போல உன்னை விடடு நான் பிரியமாட்டேன் என்று கூறினான். ஆனால், அவன் செய்த சத்தியத்தை மீறி இன்று என்னை பிரிந்து சென்றிவிட்டான். மூங்கிலைப் போன்ற என்னுடைய தோள்கள் வருந்துமாறு பாலை வழியாக பொருள்தேடி சென்றுவிட்டான். அந்நிலம் வறட்சியால் வெடிப்புடன் கூடிய நிலம். நிழலில்லா மரமுடையது. நெல்லிட்டாள் அது பொரிந்துவிடும் அளவு வெப்பமுடையது. கள்வர்கள் கூட இல்லாத கொடிய நிலம். அந்நிலத்தின் வழியாக சென்றுள்ளான் தலைவன். முருங்கைப் பூக்கள் கடலலைப் போல சிதறிகிடக்கும். இத்தகைய பாதையில் பொன்னையும் பொருளையும் தேடி தலைவன் சென்றுள்ளான் 

கருத்துகள் இல்லை: