வாழ்க்கை புதுமை
நீருக்கு ஏங்கும்
மனமோ
நீயிருக்க ஏங்க
மறுக்கிறது
தாகங்கள் பலவிதம்
நீயோ அதிலொரு
புதுவிதம்
கேட்கதான் ஆளில்லை
இங்கு கேள்விகள்
ஏராளம்
பழைய சோறும்
புதுமையானது
சட்டிச் சோறாய்….
விடியாமலே கிடக்கிறது
சிலர் வாழ்வும்
குட்டிச்சுவராய்….
புதுமை புதுமை
என்றவையெல்லாம்
பழமையில் பரிணாமங்களே
…
ஒன்றை மட்டும்
மறந்துவிட்டேன்
நீ என்றும்
புதுமையின் புதுமையே
ஏக்கங்கள் தோன்றும்
போதெல்லாம்
தோள் கொடுக்கின்றன
உன்தன் நினைவுகள்
மறதி எனக்கு
மறந்தே போகிறது
புதுமையைப்
பார்க்கும் வரை….
தேவாரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக