6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 நவம்பர், 2024

பேரன் சட்டை - முனைவர் பீ. பெரியசாமி

 

பேரன் சட்டை

முனைவர் பீ. பெரியசாமி

பரபரப்பான சாலையில் சற்று நிதானமாக ஒரு முதியோர் சென்று கொண்டிருந்தார் அவரையே அங்கிருந்த அத்தனை கண்களும் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தனர் . ஒரு கை மட்டும் திடீரென அவரை நிறுத்தியது எல்லோரும் பெருமூச்சு விட்டனர் பாவம் எல்லோரும் ஏமாந்து போனார்கள் ஒரு செல்பியும் நூற்றுக்கணக்கான லைக்குகளும் அவர்களுக்கு தவறி போனது ஆமாம் அந்த முதியவர் ராமு அவருக்கு சில நாட்களுக்கு முன்புதான் கண்புரை நீக்கு சிகிச்சை செய்யப்பட்டது கருப்பு நிற கண்ணாடி அணிந்திருந்ததால் அருகில் இருந்த கருப்பு நாய் அவருக்கு தெரியாமல் போனது அதன் அருகே சென்றவரை தான் நம் மக்கள் வேடிக்கை பார்த்தனர் சரி கதைக்கு வருவோம் இந்த ராம தாத்தா தான் நம் கதையின் நாயகன் அவர் மிகவும் திறமைசாலியானவர் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அவர் தன் பேரன் சோமுவுக்கு துணி எடுக்க போனார் அந்த கடை ரொம்ப வசதியானவர்கள் துணி எடுக்கும் கடை உள்ளே போனதும் வியந்து பார்த்தார் தம் பேரனின் வயது கூறி ஒரு பேண்ட் சர்ட் கொடுக்குமாறு சொன்னார் அவர்கள் என்ன பிராண்ட் வேணும் என கேட்டனர் அவருக்கு அது விளங்கவில்லை உடனே மீண்டும் பேண்ட் சர்ட் தா பா வேணும் வேற எதுவும் எனக்கு வேண்டாம் என் பேரன் அதுதான் கேட்டான் என்று சொன்னார் உடனே அங்கு இருந்த மற்றொருவர் ஐயா உங்களுக்கு என்ன விலையில் துணி எதிர்பார்க்கிறிங்க என்று கேட்டார் உடனே அவரும் ஒரு 500 600 இருந்தா போதும் என்று சொல்ல ஐயா இங்கிருக்கும் துணிகள் எல்லாம் 5000 ரூபாய்க்கு மேல தான் விலை அதனால நீங்க வேற எங்கேயாவது கேட்டு பாருங்களேன் என்றனர் உடனே செய்வதறியாது வெளியேறினார் அவர் மனதுக்குள் ஒரு ஆசை அந்த துணிக்கடையில் இருக்கும் பொம்மை போட்டிருக்கும் துணியை போல தன் பேரனுக்கும் எடுத்துக் கொடுக்க வேண்டும் என என்ன செய்ய அவரிடமும் ஆயிரம் ரூபாய் தான் இருந்தது பேரனுக்கு துணி வாங்க எழுநூறு காய்கறி வாங்க 100 திண்பண்டம் வாங்க நூறு போக்குவரத்துக்கு 100 என குப்பாத்தா கிழவியின் கணக்கு போட்டு கொடுத்து அனுப்பியது நீண்ட யோசனையில் ஆழ்ந்தவாரே நடந்து சென்றார் போகும் பாதையில் மக்கள் கூட்டமாக கூடி வேடிக்கை பார்த்தவாறு இருந்தனர் அங்கு ஒரு தடியான நபர் நின்று கொண்டு தன்னோடு போட்டியிட்டு வெற்றி பெறுபவருக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு என அறிவித்து கொண்டு இருந்தான் தன் முதுகில் தரையில் உள்ள மண் படும்படி செய்ய வேண்டும் அதுவே போட்டி என சொன்னபடியே தன் உடலை அசைத்துக் காட்டிக் கொண்டிருந்தான் எல்லோரும் அவன் உடல் வாகு பார்த்து யாராவது இவனிடம் சிக்கி உயிரை விட வருவார்களா என்ன இவனே கத்தினு இருந்துட்டு போக வேண்டியதுதான் அப்படி என்று பேசிட்டு இருந்தாங்க இதையெல்லாம் கேட்டுட்டு இருந்த ராமு தாத்தா நான் போட்டிக்கு ரெடி நீ ரெடியா அப்படின்னு கேட்க அங்கு இருந்தவங்க எல்லாம் குபிர் என்று சிரிச்சிட்டாங்க அந்த தடியான நபரோ ஐயா நீங்க வயசானவங்க நான் அடிச்சா இறந்து போயிட்டீங்கனா பாவம் வயசான உங்களை கொன்ன பாவம் எனக்கு வேண்டாம் போய்விடுங்கள் என்று சொல்ல தாத்தா பிடிவாதமாக உன்னோடு போட்டியிட நான் தயார் உன்னால முடியாதுன்னா பந்தயத்தில் தோத்துடனு ஒத்துக்க அப்படின்னு சொல்ல சண்டை ஆரம்பமானது ராமு தாத்தா சண்டையில் வெற்றியும் பெற்றார் எப்படி தானே கேக்குறீங்க அட பந்தயத்தை கொஞ்சம் கவனிங்க முதுகில் தரையில் உள்ள மண் படும்படி செய்ய வேண்டும் என்பது தானே போட்டி தாத்தா தன் கையில் மண்ணை தொட்டுக்கொண்டு சண்டையிட வந்தவனுடைய முதுகில் பூசி விட்டார் உடனே தான் வெற்றி பெற்றதாகவும் கூறினார். எல்லோரும் ஆச்சரியப்பட்டனர் எப்படி என்று  தாத்தாவிடம் கேட்க தாத்தாவும் விளக்கம் கூறினார் அவருக்கு பரிசு பணமும் கிடைத்தது அந்த பரிசுப் பணத்தை கொண்டு தான் விரும்பியபடி தன் பேரனுக்கு துணிக்கடை பொம்மை போட்டிருந்த துணியை வாங்கிச் சென்றார் ஆயிரம் உறவுகள் அன்பை நம்மிடம் பகிர்ந்தாலும் தாத்தா பேரன் அன்பு என்பது அனைத்திற்கும் மேலானது.

கருத்துகள் இல்லை: