6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 நவம்பர், 2024

தண்டரை பீமேஸ்வரர் கோயில் - தேவாரம்

 

தண்டரை பீமேஸ்வரர் கோயில்

தேவாரம்

திருவண்ணாமலை மாவட்டம், தண்டரை என்னும் ஊரில் அமைந்துள்ள பீமேஸ்வரர் எனும் சிவன் கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

கோயில் அமைப்பு

இக்கோயிலில் பீமேஸ்வரர், பச்சை மரகதவல்லி தாயாருக்கி ஓரே சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இத்திருத்தலத்தின் பழைய கோயில் முழுமையாக இல்லாமல் போய்விட்டது புத்தாக ஊர்மக்கள் ஏழு அடி உயரத்திற்கு சுவரெழுப்பி அங்கேயே பீமேஸ் வரர் மரகத வல்லி தாயார் சிற்பங்கள் உள்ளன.

தண்டரை பீமேஸ்வரர் கோயில்  விழாக்கள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. இக்கோயிலின் பழைய கட்டிடங்கள் முழுமையும் அடையாளமற்றுப்போக சென்னையில் வந்த தம்பதியினர் அதனை சமன்படுத்தி தந்ததாகவும் அங்கிருந்த சிவலிங்கம், மரகதாம்பிகை தாயார், விநாயகர், முருகர் சிலைகள் எடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பிரதிஷ்டை செய்ததாகவும் கூறுகின்றனர்.

o   பீமேஸ்வரர், பச்சை மரகதவல்லி தாயாருக்கு சேர்ந்தவாறு ஒரு சன்னதி உள்ளது.  இது இரண்டு ஆண்டுக்களுக்கு முன்பாக, ஊர்மக்களால் ஏற்படுத்தப்பட்டது. 





இத்தலம் தண்டரை பீமேஸ்வரர் திருத்தலமான அழைக்கப்படுகிறது. இது விக்கிப்பிடியாவில் மட்டுமே பாடல்பெற்ற தலமாகக் கூறப்பட்டுள்ளது.

 

கருத்துகள் இல்லை: