தாயில்லா மகன்
1. பசி
நேரத் துயரம்
பசிவந்த நேரத்துப்
பால்சோறு ஊட்ட
அசிபசி தீர்க்கும்
அமுதம்
- நசிந்தே
தனித்து வருந்தும்
தனயன் துயரம்
இனித்த
தாய் இல்லா இடர்.
2. பாதுகாப்பு
இல்லா நிலை
நிழலில்லா மரம்மேல்
நிலைகொண்ட பறவை
அழகில்லா வாழ்வும்
அதுவே
- விழியிமைபோல்
காக்கின்ற தாயை
இழந்த மகனவன்
நோக்கின்ற
திசையெலாம் நோய்.
3. ஆறுதல் தேடல்
அழுத கண்ணீரைத்
துடைக்கவே ஆளில்லை
தொழுத தெய்வமும்
தோன்றவில்லை
- மழுங்கிய
கத்தியாய் உள்ளம்
கலங்குமே தாயினைப்
பிரிந்த மகனின்
நிலை.
4. அன்பு
வறட்சி
அன்பெனும் ஊற்றார்ந்து
அணைத்திடும் தாய்மடி
இன்பம் இழந்தவன்
ஏங்குகிறான்
- துன்பம்
கடலாய் எழவே
கலங்கித் தவிக்கும்
உடலாய்
உயிர்நீத்த ஊன்.
5. உலகத்தின்
பார்வை
தாயிருந்தால்
உலகம் தலைவணங்கும் தானென்றும்
வாயிருந்தால்
சோறு வரும்
- போயினாளே
கண்ணான அன்னை
கவலைக் கடலினிலே
பெண்ணின்
மகனே பிணி.
6. கனவில் வரும் அன்னை
கனவில் வருகின்ற
காரிகை அன்னை
நனவில் மறைவதுதான்
ஏனோ?
- மனமது
வெந்து உருகுமே
மெல்லவே தாயினை
முந்து
இழந்த மகன்.
7. திருவிழாக்
காலம்
வீதித் திருவிழா
வேடிக்கை பார்த்திட
ஆதித் தாயில்லை
அருகினிலே
- நீதி
இறைவா இதுவோ? இளமையிலே அன்னையை
பிரிந்த
மகனின் பிழை.
8. தனிமையின்
கொடுமை
கூடி விளையாடும்
கூட்டத்தில் இருந்தாலும்
தேடித் துடிக்குமே
நெஞ்சம்
- ஓடிவந்து
முத்தமிடும்
தாயை இழந்த மகனுக்கு
நித்தம்
தனிமை நிலை.
9. வழிகாட்டுதல்
இன்மை
தடுமாறி வீழும்
தளர்நடைக் காலத்தில்
கைதூக்கி விட்டவள்
எங்கே?
- மெய்வருந்தக்
காக்கும் தாயில்லாக்
கவலையினால் இவ்வுலகம்
பார்க்கும்
மகனுக்குப் பாழ்.
10.
முடிவிலாத் தேடல்
மண்ணில் பிறந்ததற்கே
சாட்சியாய் நின்றவள்
விண்ணில் மறைந்ததே
விந்தை
- கண்ணின்
மணியை இழந்த
குருடனைப் போலத்
தாய்இல்லாச்
சேயவன் தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக