கவிதைகள் - முனைவர் பீ. பெரியசாமி
மரணத்தைக் கண்டு
மனம் தடுமாறுவதில்லை
பலமுறை மரணித்து விட்டோமே...
மந்திரங்கள் முழங்கினேன்
பூசைகள் புரிந்தேன்
கடவுளைக் காண...
ஆதி அந்தமில்லாதவன்
ஆனந்தமாய் கூத்தாடுகிறான்
பௌவுர்ணமி இரவில்..
அன்பே அனைத்துமென்றாய்
அன்று விளங்கவில்லை
அனாதையானேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக