7 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

உலகமயமாதல் எனும் ஒற்றைக் குடை - முனைவர் பீ. பெரியசாமி

 

உலகமயமாதல் எனும் ஒற்றைக் குடை

 

பச்சை ஆடை உடுத்திய

இயற்கையின் எழில் எங்கே?

ஓடிய ஆற்றுநீரும், அமைதி தந்த ஏரியும்,

தாமரை பூத்த குளமும்...

இன்று கான்கிரீட் காடுகளுக்குள்

காணாமல் போன சுவடுகளாய்!

 

ஏர் பிடித்த விவசாயம்

எந்திரங்களின் வசமானது;

ஏட்டுக்கல்வி இப்போது

வியாபாரக் கடைகளானதே!

படித்த படிப்புக்கு ஏற்ற வேலையும்

கண்ணாடித் திரைகளுக்குள்

சொடுக்கும் விரல்களாய் சுருங்கிப்போனதே!

 

மரக்கிளையில் பாடிய பறவைகளும்,

காட்டில் திராணியாய் உலாத்திய விலங்குகளும்,

மண்ணோடு வாழ்ந்த புழு பூச்சிகளும்...

கணினித் திரையின் 'சுவரொட்டி' படங்களாய்

கூண்டுகளுக்குள் அடைபட்டுக் கிடக்குதே!

 

ஓடிப் பிடித்து விளையாடிய

குழந்தைகளின் விளையாட்டு பருவம்,

தொடுதிரை விளையாட்டுகளில்

தொலைந்துதானே போனது!

 

துள்ளிக் குதிக்கும் இளமை வயது

லைக்குகளுக்குள் லயித்து நிற்க,

சுமைகள் தாங்கும் நடுத்தர வயது

கடன்களின் வலைக்குள் கண்ணீர் சிந்த,

முதியோர் வாழ்வோ...

அடைக்கல இல்லங்களின்

அமைதிச் சுவர்களுக்குள் முடங்கிக் கிடக்குதே!

 

உலகம் நம் கைகளில் என்பார்கள்...

ஆனால்,

நமது உணர்வுகளும், உறவுகளும்

எங்கோ தொலைதூரத்தில்...

உலகமயமாதல் எனும்

ஒற்றைக் குடைக்குள்ளே!

கருத்துகள் இல்லை: