6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 மார்ச், 2021

தவிப்பு -தா.சரவணன்

 



 

நிராகரிக்கும்

உன் மீதுதான்

நிரம்பி வழிகிறது

என் அன்பு

 

ஏற்றுக்கொள்ளப்படாத

உன்னிடத்தில்தான்

ஏங்கி நிற்கிறது

என் காதல்

 

கிடைக்காத

உனக்காக

அடம் பிடித்து

அழுகிறது

என்

மனக்  குழந்தை 

 

ஈட்ட

இதயமில்லாத

உன்னிடத்தில்

இரத்தல் செய்கிறது

என் இதயம்

 

நான் 

இறந்த தகவல்

கேட்டபின்பாவது

உன் கண்ணிலிருந்து

இறங்குமா

ஒரு துளி

கண்ணீர்

 

என்னிடமிருந்து

ஒற்றை மலரை

நிராகரித்த

நீ தான்

என் மரணத்திற்கு

மாலையோடு

வருவாய்

 

தா.சரவணன்

தொடர்பு எண்:9786577516 கல்யாணமந்தை

திருவண்ணாமலை (மாவட்டம்)

635703

3 கருத்துகள்:

SIRANJEEVI சொன்னது…

Thavipu enum thalaipil Kathal valiye unarvu purvama unarththi thanks.saravanan kavithai arumai

ஆறுசெல்வராஜ். த சொன்னது…

மிக இயல்பாகவும் ஆழமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது... வாசனுக்கு அடுத்த கவிதையை எதிர்பார்க்கும் தவிப்பை ஏற்படுத்துகிறது...

மோகன் சொன்னது…

காதலை தாங்கி நீற்கும் இதயத்தின் வலியை இயல்பாய் உரைக்கும் வரிகள் அருமை.....